×

அரவக்குறிச்சியில் திமுகவுக்கு வாக்குசேகரிக்க திருவாரூர் தொமுச முடிவு

திருவாரூர், ஏப்.25: திருவாரூர் மாவட்ட தொ.மு.ச  பேரவையின் மாவட்ட கவுன்சில் கூட்டம் திருவாரூரில் நேற்று மாவட்ட தலைவர் குருநாதன் தலைமையில் நடைபெற்றது. மாவட்ட செயலாளர் மகாதேவன், மாவட்ட பொருளாளர் தமிழரசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட துணை செயலாளர் ராமகலைச்செல்வன் மற்றும் பொறுப்பாளர்கள் சுடலைமாடன், சண்முகம் உள்பட பலர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் வருகிற 1ம் தேதி  மே தினத்தையொட்டி மாவட்டம் முழுவதும் உள்ள  அனைத்து அலுவலகங்களின் நுழைவாயில் முன்பாகவும், பொது இடங்களிலும் கொடியேற்றி  மே தினத்தை சிறப்பாக கொண்டாடுவது, அடுத்த மாதம் 19ம் தேதி நடைபெற உள்ள அரவக்குறிச்சி இடைத்தேர்தலில் திமுக வேட்பாளர் செந்தில்பாலாஜியை அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்ய தொகுதி மக்களிடம் தீவிர  வாக்கு சேகரிப்பு பணியில் ஈடுபடுவது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Tags : Tiruvarur ,DMK ,
× RELATED ஒவ்வொரு துறையிலும் முதல்வனாக...